திபா கணவரை “வெளியே போ” என்றார்!!

SIBY HERALD


 அரசியல் பிரச்சனை காரணமாக தீபா தனது கணவர் மாதவனை வீட்டை விட்டு விரட்டிவிட்டாராம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகளான தீபாவை அரசியலுக்கு வருமாறு அதிமுக தொண்டர்கள் பலர் கேட்டது இதையடுத்து சுபயோக சுபதினத்தில் அரசியலுக்கு வந்தார் தீபா.



அரசியல், புதுக்கட்சியால் ஏற்பட்ட பிரச்சனை பெரிதாகி மாதவன் தீபாவை பிரிந்தார். இந்நிலையில் மாதவன் நேற்று தீபாவின் வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார்.


வீட்டுக்கு வந்த கணவனை தீபா விரட்டிவிட்டாராம். இதனால் அங்கு தீபா மற்றும் மாதவன் ஆதரவாளர்களிடையே  பெரிய மோதல்  ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்துள்ளனர் .

Find Out More:

Related Articles: