நெஞ்சார்ந்த ரம்ஜான் வாழ்த்துக்கள்... பிரதமர் மோடி

Sekar Chandra
புதுடில்லி:
"ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்" என்று ரம்ஜானையொட்டி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தான் பிரதமர் நாவஸ் ஷெரீப், ஈரான் அதிபர் ரவுஹானி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கனி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா உட்பட பல்வேறு இஸ்லாமிய தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தார்.


மேலும் அவர் தனது டுவிட்டரில் " சிறப்பான ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். 



Find Out More:

Related Articles: