ஜோதிகாவுடன் சேரும் கோபி நைனார்

SIBY HERALD
கத்தி மற்றும் மெட்றாஸ் படங்களின் கதையை பறிகொடுத்து நியாயம் கிடைக்காமல் போனவர் கோபி நைனார். மீஞ்சூர் கோபி என்ற பெயரில் அப்பொழுது அறியப்பட்ட இவர் எடுத்து வந்த படமான கறுப்பர் நகரம் படமும் மெட்றாஸ் வெளியீட்டால் அப்படியே நின்றும் போனது.



ஆனால் இவரது விடா முயற்சியாலும் உழைப்பாலும் சென்ற ஆண்டு இவருக்கு பெரிய வாய்ப்பு அமைந்தது. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இவருக்கு கொடுத்த பெரிய வாய்ப்பு தான் அறம் படம். நயன்தாரா கலெக்டராக நடித்த இந்த சூப்பர்ஹிட் படத்தை அடுத்ததாக இவர் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜெய்யை வைத்து ஒரு படம் எடுத்து வருகிறார்.



இதனை அடுத்து இவர் பிரசா முண்டா வாழ்க்கை வரலாற்றை இயக்குகிறார். இந்த இரண்டு படங்களுக்கு பின்னர் கோபி நைனார் அடுத்ததாக ஜோதிகாவை வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளாராம். ஒரே வீட்டில் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுக்கப்படவுள்ள இந்த படத்தை இருப்பதே நாட்களில் ஷூட்டிங் செய்ய உள்ளாராம் கோபி நைனார். 


Find Out More:

Related Articles: