சரோஜா வதந்திக்கு முற்று புள்ளி வைத்த வெங்கட் பிரபு

Sekar Tamil
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது 'சென்னை 600028-2' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது பின்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 


இந்நிலையில், சமீப காலமாக இணையதளத்தில்  வெங்கட் பிரபு,  அடுத்து 'சரோஜா' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போகிறார் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 


இதை அறிந்த வெங்கட் பிரபு, இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் தற்போது 'சென்னை 600028 - 2' திரைப்படத்தில் மட்டும் தான் கவனம் செலுத்தி வருகிறேன். 'சரோஜா - 2' படத்தை பற்றி நான் சிறிதளவு கூட யோசித்ததில்லை. 


என்னுடைய திரைப்படங்களை நானே, ரசிகர்களுக்கு அதிகார பூர்வமாக அறிவிப்பேன். அதனால் பொய்யாக வெளிவரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்'. 


இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


Find Out More:

Related Articles: