சூனிய வேட்டையாடும் விஷால்... ராதிகா டுவிட்டரில் தாக்கு

Sekar Tamil
சென்னை:
நடிகர் விஷால் சூனிய வேட்டையை தொடங்கிட்டாராம்... தொடங்கிட்டாராம். இப்படி சொல்லியிருப்பது ராதிகா சரத்குமார்தான்.


விஷயம் என்னன்னா? நடிகர் சங்கத்தில் இதற்கு முன் பொறுப்பில் இருந்த சரத்குமார், ராதாரவி ஆகியோர் ரூ.100 கோடிக்கு முறைகேடு செய்துள்ளனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாசர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது தெரிந்த விஷயம். 


இதற்குதான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விஷாலை விட்டு காய்ச்சி எடுத்துள்ளார் ராதிகா சரத்குமார். அவர் என்ன சொல்லியிருக்காருன்னா... சூனிய வேட்டையை விஷால் தொடங்கிவிட்டார். எதில் முறைகேடு நடந்திருக்கிறது என்று எந்த விளக்கமும் இன்றி ரூ.100 கோடியில் ஆரம்பித்திருக்கிறார் என்று டுவிட் போட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.


மேடம் இது நீங்க வக்கீலாக நடிக்கு வாணி ராணி சீரியல் இல்லை என்று முணுமுணுக்கின்றனர் மற்ற நெட்டிசன்கள்.


Find Out More:

Related Articles: