சிந்து... இந்தா பிடி பி.எம்.டபிள்யூ. காரை... அறிவிப்பு...

Sekar Tamil
ஐதராபாத்:
ஒலிம்பிக் போட்டியில் வரலாற்று சாதனையை பதிவு செய்த பி.வி.சிந்துவுக்கு பி.எம்.டபிள்யூ சொகுசு கார் பரிசாக வழங்கப்படும் என்று ஐதராபாத் பேட்மின்டன் சங்க தலைவர் சாமுடேஸ்வர்நாத் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


ஒலிம்பிக் பேட்மின்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் பி.வி.சிந்து. இதையடுத்து அவருக்கு பி.எம்.டபிள்யூ சொகுசு கார் பரிசாக வழங்கப்படும் என்று ஐதராபாத் பேட்மின்டன் சங்க தலைவர் சாமுடேஸ்வர்நாத் தெரிவித்துள்ளார்.


ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த வீரர்- வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் சொகுசு கார் பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த அறிவிப்பின் படி சொன்னதை சொன்னபடி செய்துவிட்டார். வாம்மா... சிந்து உனக்காக கார்... காத்திருக்கு... 



Find Out More:

Related Articles: