திருநங்கை என்ற காரணத்தால் போலீஸ் உடல் தகுதி தேர்வில் பங்கேற்க தடை

J Ancie


மதுரை : சீருடைப் பணியாளர் பொதுத் தேர்வில் நிராகரிக்கப்பட்டதை கடுமையாக எதிர்த்து பிதிக்கப்பட்ட திருநங்கை நஸ்ரியா மதுரை நீதிமன்றத்தில் அவர் ஒரு மனு தாக்கல்வல் செய்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன்(திருநங்கை), உடலில் ஏற்பட்ட இயற்கை மாற்றத்தையடுத்து அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாகவே மாறியுள்ளார்.

அவரது பெயரை நஸ்ரியா என்றும் பெயர் மாற்றியுள்ளார் ஜெகதீஸ்வரன். காவலர் காலிப்பணியிடங்களில் தனக்கு ஒரு நேர்த்தியான பணியிடம் ஒதுக்க மனுவில் நஸ்ரியா கோரிக்கை விடுத்துள்ளார்.


உடல் தகுதி தேர்வுக்கு தன்னை அனுமதிக்கவும் உத்தரவிடக் கோரிய திருநங்கை நஸ்ரியாவின் நியாயமான மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய தலைவரிடம் விவரம் கேட்டுள்ளார். இதனையடுத்து இந்த  வழக்கு விசாரணை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Find Out More:

Related Articles: