அந்தர் பல்டி அடித்த வைகோ.. அப்படி சொல்லலையே என்கிறார்

Sekar Chandra
சென்னை:
நான் அப்படி சொல்லவில்லை என்று அந்தர்பல்டி அடித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளார் வைகோ.


திருச்சி அருகே வாளாடியில் நடந்த மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ “எனது ராஜதந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட திமுக ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது” என்று கூறியதாக செய்திகள் வெளியாக அரசியல் அரங்கு பரபரப்பு அடைந்தது.


இந்நிலையில் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் பேசிய வைகோ, "அப்படி சொல்லவில்லை. ராஜதந்திரத்தில் மிகவும் திறமையானவர் கலைஞர்.   அவர் அளவிற்கு தனக்கு ராஜதந்திரம் இல்லை என கலைஞர் நினைக்கிறார். ஒருபோதும் மதிமுகவை அழிக்கவிடமாட்டேன் என்று சொன்னேன். ஆனால் பத்திரிக்கைகளில் தவறாக வெளியிடப்பட்டுள்ளது” என்று அந்தர்பல்டி அடித்துள்ளார்.


Find Out More:

Related Articles: