அழகான ராணியை... வில்லியாக்கிட்டீங்களேப்பா...!

Sekar Tamil
சென்னை:


அழகான ராணின்னா... ஓகே... ஆனா திமிர் பிடித்த வில்லி ராணியாம்மே என்று கதையின் ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார் கோடம்பாக்கத்து கோகிலாக்கா. என்ன விஷயம் என்றால்...


"இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என்ற சூப்பர் டூப்பர் ஹிட் காமெடி படத்தை இயக்கியவர் கோகுல். இவர் கார்த்தியை வைத்து இயக்கியுள்ள படம்தான் காஷ்மோரா.


கார்த்தி, நயன்தாரா, பநீதிவ்யா, விவேக் என்று நட்சத்திர பட்டாளமே களத்தில் குதித்துள்ளது இந்தபடத்தில். பில்லி, சூனியம் தொடர்பான இந்த படத்தில் கார்த்திக்கு 3 வேடமாம். நாயகி நயன்தாராவுக்கு திமிர்பிடித்த ராணி கேரக்டராம். (அடப்பாவிங்களா! அழகான ராணியை திமிர் பிடித்த வில்லியாக்கிட்டீங்களா?)


அதாவது இதில் வரும் ராஜா காலத்து கதையில் கார்த்திக்கு வில்லியாக அதகளம் செய்துள்ளாராம். துப்பறியும் நிருபர் கேரக்டர் பநீதிவ்யாவிற்காம்.



Find Out More:

Related Articles: