போராட்டம் வேண்டாம்... நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்

Sekar Tamil
கன்னடர்கள், தமிழர்கள் அறவழியற்ற இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தி உள்ளார். 


காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகாவில் தொடர் வன்முறைகள் வெடித்து வருகிறது. தமிழர்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து தமிழகத்திலும் ஆங்காங்கே சில இடங்களில் அசம்பாவிதங்கள் நடந்தாலும் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது.


 இந்நிலையில் கன்னடர்கள் மற்றும் தமிழர்களின் அறவழியற்ற இந்த போராட்டத்தை கைவிட கர்நாடகாவை சேர்ந்த நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



Find Out More:

Related Articles: