பட்டென்று பேசுவார்... இப்போ சட்டென்று செய்தார்...

Sekar Tamil
சென்னை:
மனதில் உள்ளதை பட்டென்று பேசி விடுவார். தோன்றியதை சட்டென்று செய்துவிடுவார். அதுபோல் இவர் செய்த செயல்தான் தற்போது கோலிவுட்டை கலக்கி வருகிறது.


யார் தெரியுங்களா அவர்? தெரிஞ்சுக்குவோமா? அவர் கங்கை அமரன்தான். இசைஞானியின் தம்பி. சிறந்த இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என்ற பல முகங்கள் கொண்ட இவருக்கு ஒரு குணம் உண்டு. பட்டென்றும், சட்டென்றும் தோன்றியதை செய்வதுதான் அது.


இவர் ஒரு பிரபல தமிழ் சேனலில் நடந்து வரும் குழந்தைகள் இசை நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். இதன் படப்பிடிப்பின் போது ஒரு குழந்தை ரொம்ப கடினமான பாடலை அசால்ட்டாக பாடி முடிக்க, கங்கை அமரன் எழுந்து ஓடி வந்து அந்த குழந்தையை தூக்கி பாராட்டினார். அத்தோடு விட்டாரா? இல்லியே... தன் விரலில் இருந்த மோதிரத்தை கழட்டி அந்த குழந்தைக்கு கொடுத்தார் பாருங்கள்.
அதுதான் ஹைலைட்... இது பார்ப்பவர்களை நெகிழ வைத்தது.



Find Out More:

Related Articles: