நாங்க 3 பார்ட்டுங்க... தனுசின் வடசென்னைதாங்க...

Sekar Chandra
சென்னை:
பாகுபலியே பார்ட் 2தான் ஆனா... நாங்க வர்றோம்... 3 பார்ட்டா என்று முஷ்டி முறுக்கிக்கிட்டு களத்தில் குதித்துள்ளார் தனுஷ். ஆமாங்க... உண்மைதான். அம்புட்டு பெரிய படமாம் இது.


தனுஷ் நடிகராக மட்டுமின்றி நல்ல தயாரிப்பாளராகவும் பேர் வாங்கிட்டார். இவர் தயாரிச்ச காக்காமுட்டை, விசாரணை படங்கள் விருதுகளை அள்ளியது. பொல்லாதவனில் ஆரம்பித்த வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி செம ஸ்டாராங்கா கான்கிரீட் போட்டது போல ஆகிடுச்சு.


இதையடுத்து இந்த வெற்றி கூட்டணி சேர்ந்திருக்கிற படம்தான் வடசென்னை. இதோ...அதோ... என்று இழுத்துக்கிட்டே போன இந்த படத்தோட பூஜை இன்று (22ம் தேதி) பூஜையுடன் தொடங்கியது. அட இது பெரிய விஷயதமே இல்ல... இனிமேதான் இருக்கு ஹைலைட். இந்த படம் 3 பாகங்களா வெளிவரப்போகுதாம். இது எப்படி இருக்கு. பாகுபலியே 2 பார்ட்தான். ஆனா நாங்க 3 பார்ட் என்று களத்தில் குதிச்சிருக்கு படக்குழு.


தனுஷ், சமந்தா நடிக்கும் இந்தப் படம் இரு பாகங்களாக வெளிவரும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால், இன்னைக்கு பூஜை பற்றிய அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், வட சென்னை 3 பாகங்களாக வரும்ன்னு அதிகாரப்பூர்வமாக சொல்லியிருக்கார். வாங்க.... காத்திருக்கோம்.


Find Out More:

Related Articles: