பறக்கும் போது அதிர்ச்சி கொடுத்த ஹெலிகாப்டர்... கோளாறு...

Sekar Tamil
திஸ்பூர்:
பறக்கும் போது அதிர்ச்சி கொடுத்தது ஹெலிகாப்டர்... உடனே அவசரமாக தரையிறக்கினர். என்ன விஷயம் தெரியுங்களா?


ஸ்கைஒன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்ஐ-172 ரக ஹெலிகாப்டர் ஒன்று கவுகாத்தியில் இருந்து இடாநகருக்கு புறப்பட்டது. இதில் நிறுவன ஊழியர்கள் உட்பட மொத்தம் 8 பேர் பயணம் செய்தனர்.


ஆனால் நடுவானில் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. புறப்பட்ட சற்று நேரத்தில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட அசாம் மாநிலத்தின் நகோன் மாவட்டம் அருகே ஹெலிகாப்டரை பத்திரமாக தரையிறக்கினார் பைலட். அதற்கு பிறகே அதில் பயணம் செய்தவர்களுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.



Find Out More:

Related Articles: