தரவரிசை குறையும்... அறுவை சிகிச்சை பெற்ற சாய்னா வருத்தம்...

Sekar Tamil
ஐதராபாத்:
காயத்தால் சிகிச்சை பெறும் வேளையில் உலக தரவரிசை குறையும் என்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.


என்ன விஷயம் என்றால்... ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தொடக்க சுற்றுடன் வெளியேறிய இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வலது கால் மூட்டு காயத்தால் பாதிக்கப்பட்டார். 


 தொடர்ந்து அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நான்கு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர். 


 இந்நிலையில், சாய்னா நேவால், கூறுகையில், "அக்டோபர் இறுதி வரை முழுமையாக குணமடைய வாய்ப்பில்லை. தற்போது உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளேன். இந்த இடம் மேலும் சரியலாம். குணமடைந்து விட்டால் நவம்பர் மாதங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.” இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


Find Out More:

Related Articles: