ரோஹித்தை தாக்கும் அனுஷ்கா!

SIBY HERALD
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் தோல்வி அடைந்ததில் இருந்தே இந்திய கிரிக்கெட் வீரர்களிடையே பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. உலகக்கோப்பையின்போது ரோஹித் கூறிய ஆலோசனைகளை கோஹ்லி ஏற்று கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியாயின.



இந்நிலையில் விராத் கோஹ்லி மற்றும் மனைவி அனுஷ்கா ஷர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரோஹித்சர்மா அன்ஃபாலோ செய்துவிட்டார். விராத் கோஹ்லி இன்னும் ரோஹித்தை ஃபாலோ செய்து கொண்டு இருக்கின்றார்.



இந்நிலையில் விராத் கோஹ்லியின் மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மா, பொய் தோற்றங்களுக்கு இடையில் உண்மை அமைதியாக இருக்கும்  என்று இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். அனுஷ்காவின் பதிவு, ரோஹித் ஷர்மாவுக்கு என்று  ரசிகர்கள் கருதுகின்றனர்.


Find Out More:

Related Articles: