புல்...புல்...ஹவுஸ் புல்... தியேட்டரில் இல்ல... திருச்சி சிறையில்...

Sekar Tamil
திருச்சி:
புல்... புல்... ஹவுஸ் புல்... இது திரையரங்கில் இல்லீங்க... சிறைச்சாலையில்...


என்ன விஷயம் என்றால் கோவை கலவர வழக்கில் கைதானவர்களை அடைத்து வைக்க, திருச்சி மத்திய சிறையில் இடமில்லாததால் 40க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டனர்.


 கோவையில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்ட 222 பேர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டனர். இதில் 191 பேர் திருச்சி சிறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.


 இவர்களை அடைத்ததால், திருச்சி சிறையில் தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பின. விசாரணைக் கைதிகளுக்கான கட்டிடங்களில் போதிய அளவு இடமில்லாததால், சிறை மருத்துவமனை பிளாக்குகளிலும் ஏராளமான கைதிகளை அடைக்கப்பட்டுள்ளனர்.


இதற்கு பிறகும் 40-க்கும் அதிகமான கைதிகள் வந்ததால் அவர்களை புதுக்கோட்டை கிளை சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் திருச்சி சிறை முழுமையாக நிரம்பியுள்ளதாக சிறைதுறை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.



Find Out More:

Related Articles: