சிங்கப்பூரின் வரலாற்றில் முதல் பெண் அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹலீமா யாகோப் தேர்வு

J Ancie


 


சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக ஹலீமா யாகோப்  தற்போது தேர்வாகியுள்ளார். எதிர்த்து போட்டியிட்டவர்கள் இருவர்  தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஹலீமா யாகோப்புக்கு இந்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூரின் அதிபராக பதவி முன்பு வகித்துவந்த  டோனி டான் கெங் யாமின் பதவிக்காலம், கடந்த மாதம் 31ஆம் தேதியோடு முடிந்தது. அங்கு, அதிபரின் பதவிக்காலம் 6 வருடங்கள்.


இந்தத் தேர்தலில், மலாய் இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிடலாம் எனக் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 3 பேர் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டன.



க்காமலே அவர் சிங்கப்பூரின் புதிய அதிபராக வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நான் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அடைந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன் என்று புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹலீமா யாகோப் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.

 



Find Out More:

Related Articles: