என் ஆச்சி கவர்னர் மாளிகையில் டிடிவி...! திரண்டனர் டிடிவி ஆதரவாளர்கள்...!

J Ancie


 

தற்போதைய பரபரப்பாக புகையும் அரசியல் சூழ்நிலையில் அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார்.டிடிவி தினகரன் ஆதரவு மொத்தம் எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்பு ஆதரவு அளித்து வந்தனர்.இப்போது ஆதரவை வாபஸ் பெற்றனர்.



ஆளுநர் வித்யாசாகர் ராவை நேராக சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசமி பெரும்பான்மையை காண்டிப்பாக நிரூபிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் என்று ஆளுநர் வித்தியாசாகர் கைவிரித்து விட்டார்.



திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், முதலமைச்சர் எடப்பாடி பெரும்பான்மையை நிரூபித்தே வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

3 எம்.எல்.ஏ.க்கள், 7 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கருணாஸ், கலைச்செல்வன், ரத்னசபாபதி ஆகியோரும்  அவர்களுடன் உடன் சென்றனர்டிடிவி தினகரன், ஆளுநர் வித்யாசகர் ராவ்-ன் சந்திப்பு இச்சுழ்நிலையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

 


Find Out More:

Related Articles: