பெண்ணாக இருந்து ஆணாக மாறியவருடன் காதல் ; சென்னை காவல் நிலையத்தில் படு களோபரம்

J Ancie


 

சென்னையை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவர், பெற்றோரையும் அவர்கள் எதிர்ப்பையும் மீறி, பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஒருவருடன் காதல் கொண்டு, அவருடன் வாழ சென்றுவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.



சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் 26 வயது மகள், அடையாறில் உள்ள ஒரு பிரபல பலகலைக்கழகத்தில் பி.எச்.டி ஆராய்ச்சி படிப்பை படித்துவந்தார். கடந்த 28ம் தேதி அவர் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரின் பெற்றோர்கள் மகளைப்பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை மும்முரமாக தேடிவந்தனர். 



அதில், அவர் வேளச்சேரியில் ,பெண்ணாக இருந்து அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறியவர் ஒரு  நபருடன் தங்கியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

. போலிஸார் அறிவுரை கூறி அப்பெண்ணை அவரது பெற்றோருடன்  இருக்க அனுப்பி வைத்தனர். 

ஆனால், காவல் நிலையத்திற்கு வெளியே பெற்றோருடன் வந்த அப்பெண், அங்கிருந்த தனது ஆண் காதலருடன் கிளம்பி சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Find Out More:

Related Articles: