சசிகலா இதை வைத்து வெளியே வந்துவிடுவார்???

SIBY HERALD


மாரடைப்பால் மரணமடைந்த அண்ணன் மகன் மகாதேவனுக்கு அஞ்சலி செலுத்த சசிகலா, சிறையிலிருந்து பரோலில் வெளியே வருவார் என்று  அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது. சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் மகன், மகாதேவன் (47) இன்று திடிரென்று மாரடைப்பால் காலமானார்.


இவர் தஞ்சையில் வசித்து வந்தவர். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, ஜெ. பேரவை மாநில செயலாளராக சில காலம் இவர் பணியாற்றியவர். தஞ்சை வட்டாரத்தில்  செல்வாக்கு உள்ளவர் மகாதேவன். 2011ல் சசிகலா மற்றும் அவரது உறவினர்களை அதிமுகவிலிருந்து செல்வி ஜெயலலிதா நீக்கினார்.



அப்போது மகாதேவனும் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். பிறகு கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இன்று திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நிலைமை மோசமாக இருந்ததால், அவர் கும்பகோணத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கே அவர் மரணம் அடைந்தார்.இதற்கு சசிகலா வருவாரா???


Find Out More:

Related Articles: