ஜப்பான் தீவுக்கூட்டதில் இன்று நிலநடுக்கம்...

Sekar Tamil
டோக்கியோ:
ஜப்பானின் தெற்கு ஒகினாவா தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள தீவுகள் கூட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் 5.7 ஆக ரிக்டரில் பதிவானது.


உள்ளூர் நேரப்படி மதியம் 2.20 மணியளவில் கடலுக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. 


இதுமட்டுமா? ஜப்பானின் வடபகுதியில் உள்ள முக்கிய தீவான ஹொக்கைடோவிலும் மதியம் 2.13 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாக பதிவானது.


இந்த இரு நிலநடுக்கங்களால் எந்த வித சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Find Out More:

Related Articles: