சண்டாளர்கள்... குழந்தைகளுக்கு மயக்கமருந்து... ஆபாசபடம்...

Sekar Tamil
திருப்பூர்:
அதிர்ச்சியோ...அதிர்ச்சி என்று இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பள்ளி மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாசப்படம் எடுக்கப்படுவதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சிகரமாக உள்ளது. 


பல்லடம் மாணிக்காபுதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் இயங்கி வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 


1 ம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளில் சிலர் கடந்த சில நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் அடம் பிடிக்க பெற்றோர்கள் அடித்துள்ளனர். அப்போது அவர்கள் அழுது கொண்டே சொன்ன தகவல் பெற்றோர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.


அநத குழந்தைகள் சொன்ன தகவல் இதுதான்... பள்ளி அருகே உள்ள சில இளைஞர்கள் மாலை நேரங்களில் பள்ளி முடித்து வரும் சிறுமிகளுக்கு திண்பண்டங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து காட்டுப்பகுதிக்குள் அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு ஆபாசப் படங்கள் எடுத்தும், பாலியல் தொந்தரவும் செய்துள்ளனர் என்பதுதான். இதனால்தான் பயந்து போய் பள்ளிக்கு செல்ல அந்த குழந்தைகள் மறுத்துள்ளனர்.


மேலும் மயக்கம் தெளிந்த பிறகு, யாரிடமும் இதை சொல்லக் கூடாது என அந்த குழந்தைகளை அந்த கொடூரர்கள் மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், பல்லடம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செய்தி... காட்டுத்தீ போல மக்கள் மத்தியில் பரவியதால் திருப்பூர் மாவட்டமே அதிர்ந்து போய் உள்ளது. 


Find Out More:

Related Articles: