வளர்ப்பு பிராணிகள்... சிங்கம், சிறுத்தை... வளர்ப்பதோ பெண்

Sekar Tamil
சவுதி:
அவற்றுக்கும் இதயம்... உணர்வு இருக்கிறது என்று சிறுத்தை, சிங்கத்தை செல்லப்பிராணிகளாக வளர்த்து வரும் பெண் தெரிவித்துள்ளார். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?


காட்டு விலங்குகள் செல்லப்பிராணிகளாக முடியாது. இருப்பினும் சிலர் அதை வீடுகளில் வளர்த்து வருகின்றனர். அதுபோல்தான் சவுதி அரேபியாவில் ரோசனா அல் டீனி(20) என்ற இளம்பெண் சிங்கம், சிறுத்தைகளை தனது வீட்டில் செல்லபிராணிகளாக வளர்த்து வருகிறார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், என்னோட அன்றாட வாழக்கை இவற்றுடன் தான் செல்கிறது. எனக்கு நெருக்கமானவர்கள் ஆரம்பத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது அவர்களும் எனக்கு ஆதரவாக உள்ளனர். அவைகளுக்கும் இதயம், உணர்வுகள் உள்ளன என்று அதிரடித்துள்ளார். ஜாக்கிரதைம்மா... ஜாக்கிரதை...



Find Out More:

Related Articles: