போதை மருந்து கும்பல் அடாவடி... மேயர் சுட்டுக்கொலை

Sekar Chandra
மெக்சிகோ:
மெக்சிகோவில் போதை மருந்து கும்பல் மேயர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.


மெக்சிகோ நாட்டில் போதை மருந்து கும்பல் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. இவர்கள் நவீன ஆயுதங்களுடன் தனி படையையே வைத்து உள்ளனர். இவர்களை ஒடுக்க முடியாத நிலையே நீடித்து வருகிறது. 


இந்த போதைப்பொருள் கும்பல் அடிக்கடி போலீசார் மற்றும் ராணுவத்தினரை கொன்று குவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களுக்கும் இந்த கும்பல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.


இந்த நிலையில் இங்குள்ள குவரியா மாகாணத்தில் உள்ள குயிடாட் நகர மேயர் அம்பு ரோஸ்யா சோட்டாவை போதை மருந்து கும்பல் சுட்டு கொன்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்னொரு மேயரை போதை மருந்து கும்பல் சுட்டு கொன்றது குறிப்பிடத்தக்கது.
இப்படியே தொடரும் போதை மருந்து கும்பலின் அடாவடி செயல்கள் மெக்சிகோ மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


Find Out More:

Related Articles: