தெரியாது... தெரியவே தெரியாதே... கதறும் ராம்குமார் பெற்றோர்

Sekar Chandra
சென்னை:
நல்ல பையன்ங்க... எப்படி இப்படி செஞ்சான் என்றே தெரியலை சுவாதியை கொலை செய்த ராம்குமாரை பற்றி கிராமமே அப்படி பேசுகிறது. இதில் மற்றொரு கொடுமை போலீசார் வந்த பிறகுதான் தன் மகன் இப்படி ஒரு கொடூர செயலை செய்துள்ளான் என்பதே பெற்றோருக்கு தெரிந்துள்ளது.


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கு தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கியது. பல தரப்பில் இருந்தும் போலீசாருக்கு நெருக்கடி. விசாரணையை விரைந்து முடிக்க இரவு, பகல் பாராமல் போலீசார் உழைத்துள்ளனர். இதன் பலன்தான் தற்போது ராம்குமாரை கைது செய்யப்பட்டுள்ளான். தற்போது முதல்வர் முதல் அனைத்து கட்சி தலைவர்களும் தமிழக போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.


இந்த கொடூர கொலை செய்த ராம்குமாரின் பெற்றோருக்குதான் தற்போது வேதனையிலும் வேதனை. காரணம் கிராமத்தில் அமைதியாக இருக்கும் மகன் இப்படி ஒரு கொடூர செயலை செய்தானா? என்று இன்னும் நம்பிக்கை இல்லாமல் கதறி  வருகின்றனர். போலீசார் வந்து கதவை தட்டும் போதும் கூட அவனது தந்தைக்கு மகனை பிடிக்க போலீசார் வந்துள்ளனர் என்று தெரியவில்லை.


மகன் தற்கொலைக்கு முயன்ற போதும் அவர் வேறு ஏதோ பிரச்னை என்றுதான் நினைத்துள்ளார். ஆனால் தங்களையும், தங்கள் வீட்டையும் பத்திரிக்கையாளர்கள் போட்டோவும், வீடியோவும் எடுத்த போதுதான் இவர்களுக்கு முழு விபரமும் தெரியவந்துள்ளது. ஆனால் ராம்குமாரின் கிராமத்தினர் யாரும் இன்னும் இந்த சம்பவத்தை நம்ப முடியாமலேயே உள்ளனர். என்னவென்று சொல்வது இதை. கிராமத்தில் அமைதியாக இருந்தவன் சென்னையில் இப்படி ஒரு ஈவிரக்கமில்லாதவனாக மாறியது எப்படி என்பதுதான் தெரியவில்லை.



Find Out More:

Related Articles: