பழிக்கு பழி... கல்லுக்கு கல்... கணவரை கொன்றவரை அதேபோல் கொன்று பழித்தீர்த்த பெண்... கோவையில் அதிர்ச்சி

Sekar Chandra
கோவை:
பழிக்கு பழிக்கு... கல்லுக்கு கல்... என்று பெண் ஒருவர் எடுத்த முடிவு கோவை மாவட்டத்தை ஒரு உலுக்கு உலுக்கி உள்ளது. விஷயம் இதுதான். 


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தாமணி. இவரது கணவர் பெரியதம்பி. இவரது தலையில் பெரிய கல்லைப் போட்டு, அதே பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் கடந்த ஆண்டு கொலை செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்று. 


இந்த வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த ரவிக்குமார், கடந்த 14ம் தேதிதான் ஜாமீனில் வெளியே வந்தார். வந்தவர் சும்மா இருந்தாரா? இல்லியே. வெளியில் வந்தவுடன் சுகந்தாமணியின் வீட்டிற்குச் சென்ற ரவிக்குமார் அங்கு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே கணவரை இழந்த வேதனையிலும், அதனால் ஏற்பட்ட கோபத்திலும் இருந்த சுகந்தாமணிக்கு ரவிக்குமாரின் இந்த செயல் மேலும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதையடுத்து கொலையும் செய்வாள் பெண் என்று நிரூபித்தே விட்டார் சுகந்தாமணி. தனது கணவரை ரவிக்குமார் எப்படி கொன்றாரோ அதேபோல் அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு  ரத்தக் கறையுடன் போலீசில் போய் சுகந்தாமணி சரணடைந்துள்ளார். 


இச்சம்பவம்தான் தற்போது கோவையையே உலுக்கி வருகிறது.


Find Out More:

Related Articles: