மீண்டும் வெற்றி அடைந்த தேவரகொண்டா!

SIBY HERALD
நடிகர் விஜய் தேவரகொண்டா இந்த ஆண்டு தனது கேரியரிலேயே பெரிய பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தார். அந்த படம் தான் ராஷ்மிக்கா மந்தனா ஜோடியாக நடித்த படமான கீதா கோவிந்தம். பரசுராம் இயக்கிய இந்த படம் இன்கேம் காவாலி பாடலாலேயே பாதி ஹிட் ஆனது.



இதனை அடுத்ததாக இவர் பெரிய adi ஒன்றை எடுத்து வைத்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் நோட்டா என்ற அரசியல் படத்தில் நடித்தார். இருமுகன் புகழ் ஆனந்தி ஷங்கர் இயக்கிய இந்த படம் padu தோல்வி அடைந்தது.  இதனை தொடர்ந்து இவரது அடுத்த படமான டாக்சிவாலா படமும் இணையத்தில் முழுவதாக லீக் ஆனது. ஆனால் இதையும் மீறி இப்பொழுது டாக்சிவாலா படம் பெரிய பிளாக்பஸ்தார் ஆகிவிட்டது.



நான்கே நாட்களில் இருபத்தி ஐந்து கோடி வசூல் சாதனை செய்துள்ளது டாக்சிவாலா. மேலும் போட்டிக்கு வந்த படமான அமர் அக்பர் ஆந்தோணியும் பிளாப் ஆனதால் டாக்சிவாலா இன்னும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதன் மூலமாக விஜய் தேவரகொண்டா தான் தெலுங்கு சினிமாவில் ஒரு  முன்னணி நாயகனாக உருவாகி விட்டார்.   


Find Out More:

Related Articles: