அடுத்த படத்தை தொடங்கிய ஜோதிகா!

SIBY HERALD
நடிகை ஜோதிகா திருமணத்துக்கு பின்னர் கம்பேக்கில் முப்பத்தி ஆறு வயதினிலே, மகளிர் மட்டும், மற்றும் நாச்சியார் என வெவ்வேறு படங்களில் புதுமையான வேடங்களில் பெண்ணியம் பேசும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அடுத்ததாக அவர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த படமான செக்க சிவந்த வானம் படத்தில் சித்ரா என்ற வேடத்தில் ஸ்டைலிஷ் ஹீரோ அரவிந்த் ஸ்வாமி ஜோடியாக நடித்துள்ளார்.



இந்த படம் செப்டம்பர் இருபத்தி ஏழாம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு அடுத்ததாக ராதா மோகன் இயக்கத்தில் காற்றின் மொழி படத்தில் விதார்த் ஜோடியாக நடித்துள்ளார்.



இந்த படம் அக்டொஅபர் பதினெட்டாம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் வெளியாகும் முன்னரே அடுத்த படமாக இன்னொரு பெண்ணியம் சார்ந்த கதையை தேர்வு செய்து ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜ் இயக்க ட்ரீம் வாரியார் புரொடக்ஷன்ஸ் பிரபு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.


Find Out More:

Related Articles: