சினிமாவிலிருந்து சீரியல் வந்த நடிகை!

SIBY HERALD
நடிகை வித்யா பிரதீப் சைவம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியவர். இப்படத்தை தொடர்ந்து அச்சமின்றி, என்னமோ நடக்குது உட்பட பல படங்களில் நடித்தார். சூர்யா தயாரித்த பசங்க டூ படத்தில் முனீஸ்காந்தின் ஜோடியாக நடித்தவர் சமீபத்தில் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் நெகடிவ் பாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றார்.



இந்நிலையில் சமீபத்தில் இவர் டிவி சீரியலில் நுழைந்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில் நடிகை விஜயலக்ஷ்மி நடித்து வந்தார்.



திடீரென இவர் இந்த சீரியலில் இருந்து விலகவே வித்யா பிரதீப் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த சீரியல் வாய்ப்பின் மூலமாக வித்யா ஒரு ரவுண்டு வருவார் என நம்பலாம். அடுத்ததாக கிருஷ்ணா ஜோடியாக களரி படத்திலும் தனுஷின் மாரி டூ படத்திலும் நடித்து வருகிறார் வித்யா. 


Find Out More:

Related Articles: