படமின்றி தவிக்கும் பாக்ஸர்

SIBY HERALD
மாதவன் நடித்த குத்துச்சண்டை சம்பந்தப்பட்ட படமான இறுதி சுற்று படத்தின் மூலமாக திரை உலகினுள் நுழைந்தவர் ரித்திகா சிங். நிஜ வாழ்விலேயே ஒரு குத்து சண்டை வீராங்கனையான இவர் தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதுகளில் சிறப்பு கவனமும் பெற்றார்.



இப்படத்தை அடுத்து இவர் விஜய் சேதுபதியுடன் நடித்த ஆண்டவன் கட்டளை படத்திலும் உணர்ச்சிகளை மிக அழகாக காட்டியதாக பாராட்டுகள் பெற்றார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு இவர் அதிக வாய்ப்புகள் வராத நிலையில் கவர்ச்சியில் இறங்கலாம் என்று நினைத்தார். அதன் விளைவாக லாரன்ஸ் நடிப்பில் சிவலிங்கா படத்தில் படு கவர்ச்சியங்க உடைகளில் முரட்டு குத்தாட்டம் ஆடினார்.



ஆனால் இந்த படம் படு தோல்வி அடையவே வேறு படங்கள் இல்லமால் இருந்தார். இந்நிலையில் தான் இவருக்கு இறுதி சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கான குரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இப்படத்தின் பிற்பாடு மீண்டும் படங்கள் இல்லாமல் அவ்வப்போது ட்விட்டரில் கவர்ச்சியான போட்டோக்கள் மட்டும் போட்டு வந்தார்.



இந்நிலையில் தான் இவருக்கு ஆதி ஜோடியாக நடிக்க நீவேவரோ என்ற பட வாய்ப்பு வந்தது. இந்த படம் தமிழில் ஹிட்டான அதே கண்கள் படத்தின் ரீமேக்காகும். அடுத்ததாக இவருக்கு பிளாப் படங்களாக நடித்து வரும் சாய் தரம் தேஜுடன் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. பார்க்கலாம் கஸார்ச்சி காட்டி ரித்திகா சிங் வாய்ப்புகள் பெற்று தக்க வைத்து கொள்வாரா என்று. 


Find Out More:

Related Articles: