நயனுக்கு இரண்டு விக்னேஷுக்கு ஒன்று

SIBY HERALD
சில ஆண்டுகளாக நடக்காமல் இருந்த ஸ்டார் விஜய் தொலைகாட்சி நடத்தும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி, நேற்று சென்னையில் நேரு விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பச்சை நிற புடவை உடுத்தி வந்து காண்பவர்கள் மனதை கொள்ளையடிக்கும் வண்ணம் வந்திருந்தார்.



 விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் நயன்தாராவுக்கு ஒன்றல்ல இரண்டு விருதுகள் கிடைத்தது. கோபி நயினாரின் இயக்கத்தில், சென்ற வருடம் வெளியான அறம் படத்தில், ஆழ்துளை கிணற்றில் விழைந்த குழந்தையை காப்பாற்ற போராடி, தடைகளை மீறி வெற்றி பெரும் துணிச்சலான கலெக்டர் மதிவதனியாக நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை நயன்தாரா பெற்றார். இவ்விருது விழா நடுவார்களால் தேர்வு செய்யப்படுவதாகும்.



 இது போக ரசிகர்களால் ஓட்டளித்து தேர்வு செய்யப்படும் விருதான பேவரிட் நடிகை விருதும் நயன்தாராவுக்கே கிடைத்தது. விழா முடிந்த பின்னர் தன் காதலர் விக்னேஷ் சிவனை நயன் சந்திக்க, அப்பொழுது எடுத்த புகைப்படம் ஒன்றை விக்னேஷ் ட்விட்டரில் போத்திருந்தார். அதில் நயன் கையில் இரண்டு விருதுகளுடன் இருக்க, நயனை அணைத்தபடி விக்னேஷ் சிவன் இருக்கும் படி இருந்தது. இதன் கேப்ஷனாக, அவள் கையில் இரண்டு விருதுகள், என் கையில் எனது ஒரு விருது, அவள் பெருமைப்படும்படி என்று நான் விருது வாங்க போறேனோ? என்று நயனை குறிப்பிட்டு போட்டிருந்தார் விக்னேஷ் சிவன். இந்த ட்வீட் இப்பொழுது வைரலாகி உள்ளது.


Find Out More:

Related Articles: