குடிபோதையில் காரை ஒட்டி விபத்தில் சிக்கிய அருண் விஜய்

Sekar Tamil
'என்னை அறிந்தால்', 'இயற்கை', 'பாண்டவர் பூமி' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் அருண் விஜய். இவர் நேற்று குடிபோதையில் காரை ஒட்டி வந்து, பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.


நேற்று மாலை நடிகை ராதிகாவின் மகள் ரேயான்-ன் வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் அருண் விஜய் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் கலந்து கொண்டனர். 


விழாவில் அளவுக்கு அதிகமாக குடித்த அருண் விஜய், தனது பி.எம்.வ் காரில் மனைவியுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அதிவேகத்தில்  வண்டி ஒட்டியதால், நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது அவர் காரை மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.


இதனால் போலீஸ் வாகனம் சேதம் அடைந்துள்ளது. பிறகு அருண் விஜய்யிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, அவர் மீது இரண்டு வழக்குகள் தொடர்ந்து, அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.


இந்த சம்பவத்தை அறிந்த அருண் விஜய்யின் தந்தையும், நடிகருமான விஜய குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மகனுக்கு ஜாமீன், பெற்று கொடுத்து அவரை விடுவிக்க செய்தார். மேலும் போலீஸ் வாகனத்தை சரி செய்து தருவதாக கூறியுள்ளாராம்.


Find Out More:

Related Articles: