அடுத்த கட்டத்திற்கு சென்ற ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்....

Sekar Tamil
தயாரிப்பாளர் டி. சிவா தற்போது இரண்டு திரைப்படங்களை தயாரித்து வருகிறார். ஒன்று, ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படம் இன்னொன்று அதர்வா நடிப்பில் உருவாகும் 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' திரைப்படம். 


'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்பட படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இதையடுத்து 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.


அதர்வா, ரெஜினா இருவரும் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர் ஓடம் இளவரசு இந்த படத்தை இயக்குகிறார். இதில் சூரி மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட இருவரும் நடிக்கின்றனர். டி.இம்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.


Find Out More:

Related Articles: