3 நாட்கள் சென்னை ஹோட்டலில் சூர்யா....

Sekar Tamil
'24' திரைப்படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் 'எஸ்-3'. ஹரி இயக்கும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு மலேசியா, விசாகப்பட்டினத்தில்  நிறைவடைந்த நிலையில், நாளை அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. 


ஆனால் இந்த படப்பிடிப்பு வெறும் மூன்று நாட்களுக்கு சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில், இந்த படப்பிடிப்பை நடத்த உள்ளனர். 


சூர்யா, அனுஸ்கா, ஸ்ருதி ஹாசன் , ரோபோ ஷங்கர், சூரி, க்ரிஷ் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரையரங்கிற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles: