நடிகை பிடியில் என் கணவர்... மீட்டுதாருங்கள்... பெண் கதறல்

Sekar Tamil
சென்னை:
மீட்டுதாருங்க... அவங்க பிடியில் இருந்து மீட்டுத்தாருங்கள் என்று கண்ணீருடன் பெண் புகார் தந்தால் பரபரப்பு ஏற்படும் இல்லியா... ஏற்பட்டு இருக்கு.


இதுதாங்க விஷயம். சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உமாதேவி என்ற பெண் கண்ணீரும், கம்பலையுமாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். வந்தவர் கொடுத்த புகார் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்படி என்னதான் அந்த புகாரில் சொல்லியிருக்கார் தெரியுங்களா?


சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த நடிகை ராதா எனது கணவரை, என்னிடம் இருந்து பிரிக்கப்பார்க்கிறார். இவர் மீது ஏற்கனவே மாம்பலம் அனைத்து மகளிர் போலீசிலும், விருகம்பாக்கம் போலீசிலும் புகார் மனுக்கள் கொடுத்து உள்ளேன்.


போலீசார் விசாரணை நடத்தி ராதாவை எச்சரித்தார்கள். எனது கணவர் நல்லவர்தான். ஆனால் அவரை என்னிடம் இருந்து நடிகை ராதா பிரித்து விடுவாரோ என்ற பயம் உள்ளது. எனக்கு போனில் அடிக்கடி பேசி ராதா கொலை மிரட்டல் விடுக்கிறார். இப்படி போய்கிட்டே இருக்குங்க அந்த புகார் மனு. இதை போலீசார் வாங்கி கொண்டுள்ளனர். இதுகுறித்த விசாரணை எப்போது என்று தெரியவில்லை.


இதுகுறித்து ராதா தரப்பில் கூறுகையில் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.


Find Out More:

Related Articles: