பாலிவுட்டிற்கு வந்து நடிப்பதை கைவிட்ட நடிகைகள்...

Sekar Tamil
ஹிந்தி சினிமாவில் நடிக்க தொடங்கிய கொஞ்ச காலத்திலே, சினிமா துறையிலிருந்து சில நடிகைகள் வெளியேறியுள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை நாம் விரிவாக பார்க்கலாம்.


ஆயிஷா ஜூல்கா 


இவர் 1992-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு நடிப்பதை கைவிட்டு விட்டு, அழகு நிலையம் நடத்தி சம்பதஹித்து வருகிறார். 


பாக்கியஸ்ரீ 


'மைனே பியர் கே' திரைப்படத்தில் அறிமுகமான இவர், இந்த படத்திற்கு பிறகு ஹிந்தி, கன்னட, மராத்தி, போஜ்புரி உள்ளிட்ட மொழிகளின் திரைப்படங்களில் எல்லாம் நடித்து வந்தார். அதன் பிறகு நடிப்பதை விட்டுவிட்டு, திருமணம் செய்து கொன்டு, தற்போது 'ஷரிஸ்டி மீடியா என்டேர்டைன்மென்டை' நடத்தி வருகிறார். 


ட்விங்கிள் கண்ணா 


இவர் நடிகையாகவும், டிசைனராகவும், தயாரிப்பாளராகவும் பாலிவுட் சினிமா துறையில் பணியாற்றியுள்ளார். நடிகர் அக்ஷய் குமாரை திருமணம் முடித்த பின், நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். 


சைரா பானு 


இவர் திலிப் குமாரை தனது 22 வயதில் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிப்பதிலிருந்து விலகினார். இவர் நடிப்பு 'ஜங்கிள்', 'படோசன்' உள்ளிட்ட திரைப்படங்களில் பாராட்டப்பட்டது.


நீத்து சிங்க் 


இவர் நடிகர் ரிஷி கபூரின் மனைவி. பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் திரைப்பட துறையில் இருந்து விலகினார்.


பபிதா 


இவர் நடிகை கரிஷ்மா கபூர் மற்றும் கரீனா கபூரின் தாய். இவர் பல ஹிட்டான ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில், திருமண பந்தம் ஏற்பட்டவுடன், நடிப்பிலிருந்து விலகினார். 


காயத்ரி ஜோஷி 


இவர் ஷாருக்கான் உடன் 'ஸ்வாட்ஸ்' திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு விகாஸ் ஓபுராய் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரைப்பட துறையில் இருந்து விலகினார்.






Find Out More:

Related Articles: