எடுக்கிறேன் பாரு அடுத்த படம்... பஞ்., நடிகை பரபர...

Sekar Tamil
சென்னை:
பஞ்சாயத்து பேசியே பிரபலம் ஆனாலும்... இவரது படங்கள் என்னவோ... நட்டு கழன்ற சைக்கிள் போலதான் தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போட வைத்தன. இப்போ மீண்டும் படம் இயக்க இருக்கிறார் என்ற தகவலால் தயாரிப்பாளர்கள் வீட்டை விட்டே வெளியே வராமல் இருக்காங்களாம்.


ஒரு பிரபல சேனலில் குடும்பச்சண்டைக்கு பஞ்சாயத்து வைத்து சேர்த்தோ... அறுத்துவிட்டோ... பஞ்சாயத்து பேசி வருபவர் இவர். நடிகையும், இயக்குனர்தான். இவர் இயக்கிய முதல் படத்துக்கு விமர்சனம் நன்றாக இருந்தாலும் படம் வசூலில் என்னவோ பப்படம்தான். தயாரிப்பாளர் தலைக்கு துண்டுதான்.


இருந்தாலும் கெத்தை விடாமல் அடுத்தடுத்து படங்கள் இயக்க அதுவும் சுண்ணாம்பு ஆகிவிட்டது. இதனால் சைலண்ட் மோடில் இருந்தவர் ஒரு தயாரிப்பாளர் கிடைக்க அடுத்த படத்தை அவசர அவசரமாக எடுக்க... அந்த படம் தற்போது பெட்டிக்குள் ரெஸ்ட் எடுத்து வருகிறது. காரணம் தயாரிப்பாளருக்கு எடுத்த வரைக்கும் திருப்தியே இல்லையாம்.


இதனால் நீங்க படம் ரிலீஸ் பண்றதுக்குள்ள இன்னொரு படத்தையே எடுத்து ரிலீஸ் பண்ணிக் காட்டுறேன் என களத்தில் குதிச்சு இருக்காராம். தயாரிப்பாளர்களே... உங்களுக்கு துண்டா... கர்ச்சீப்பா என்று தெரியவில்லை.



Find Out More:

Related Articles: