நாங்களும் ஆதரவு... பந்த்தின் போது பெட்ரோல் பங்க் மூடல்..

Sekar Tamil
சென்னை:


நாங்களும் ஆதரவு... என்று வணிகர்களின் பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளன பெட்ரோல் பங்க் நிர்வாகங்கள்.


கர்நாடகத்தில் நடந்த வன்முறையை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் வணிகர்கள் தங்களின் கடைகளை அடைத்து பந்த் போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து பெட்ரோல் பங்க்குகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து விவசாயிகள், வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த பந்த் நடக்கிறது.


இதற்கு திமுக, மதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.


இந்நிலையில் நாங்களும் ஆதரவு என்று பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார். இதனால் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Find Out More:

Related Articles: