சரும பிரச்சனைகளை தீர்க்கும் எலுமிச்சை

Sekar Chandra
இன்றைய அழகு குறிப்பு தகவலில், எலுமிச்சை நமது சருமத்தை எவ்வாறு எல்லாம் பாதுகாக்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.


சருமத்தை பளபளப்பாக்க எலுமிச்சை மிகவும் முக்கியமானதாகும். ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றுடன், அரை தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் தடவினால் முகம் பளபளப்பாகும்.


எலுமிச்சை சாற்றுடன் சிறிது வினிகர் சேர்த்து, உடலில் இருக்கும் கருப்பான இடங்களில் தேய்த்து வந்தால் கருமை மாறும்.
எலுமிச்சை சாறு பிழிந்த பிறகு, அதன் தோடை தூக்கிப் போடாமல், அதை நன்கு உலர வைத்து பொடியாக்கி, மஞ்சள் உடன் கலந்து உடம்பில் தேய்த்து குளிக்கலாம். 


எலுமிச்சை சாற்றுடன், பன்னீர், கிளிசரின் ஆகிய மூன்றையும் கலந்து முகத்தில் தினமும் தடவி வந்தால், முகம் பொலிவு பெரும். இதோடு பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றையும் நீக்கும்.


Find Out More:

Related Articles: