செல்பி எடுக்கலையோ... செல்பி... வாலிபர் வற்புறுத்தல் விமான பணிப்பெண்ணுக்கு தொந்தரவு... தற்போது சிறையில்...

Sekar Chandra
மும்பை:
பறந்த விமானத்தில் பணிப்பெண்ணை செல்பி எடுக்கலாம் வா என்று வற்புறுத்தியவர் தரையிறங்கியதும் சிறையில் கம்பி எண்ணுகிறார். தேவையா தம்பி இது?


குஜராத்தை சேர்ந்தவர் முகமது அம்புத்கர் (29). இவர் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சவுதி அரேபியாவில் இருந்து மும்பைக்கு பறந்து வந்தார். விமானத்தில் ஒரு பணிப்பெண்ணை பலவந்தமாக செல்பி எடுக்க வற்புறுத்தி உள்ளார். நாகரீகமாக அந்த பணிப்பெண் மறுத்தபோதும் அவரது தொந்தரவு அதிகரித்துள்ளது. 


அதுமட்டுமா விமானத்தின் கழிவறையிலும் இவர் புகைப்பிடித்துள்ளார். பொறுத்துக் கொண்ட விமான பணியாளர்கள் தரையிறங்கியதும் பொங்கி விட்டனர். அப்புறம் என்ன போலீசார் வந்து அந்த வாலிபருக்கு காப்பு மாட்டி சிறையில் தள்ளிவிட்டனர். தேவையா தம்பி?



Find Out More:

Related Articles: