கொடுத்தாங்க உற்சாக வரவேற்பு... மகிழ்ந்தார் "தங்க மகன்"

Sekar Tamil
சேலம்:
கொடுத்தாங்க... உற்சாக வரவேற்பு... குளிர்ந்துபோய்விட்டார் தமிழ்நாட்டின் தங்க மகன்.


என்ன விஷயம் என்றால்... பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தின் புகழ்கொடியை உயர்த்தி பிடித்தவர் மாரியப்பன். இவரை கவுரவிக்கும் வகையில் அவரது சொந்த ஊரில் தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.


அதுமட்டுமா... போட்டி முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிய அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு அவரை அசத்தி விட்டது.


பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்தபடியே உள்ளன.


மாரியப்பன் டில்லியில் பிரதமரை சந்தித்தபின்னர் சொந்த ஊருக்கு திரும்பினார் அவருக்கு நண்பர்கள், ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் படித்த பெரியவடகம்பட்டி பள்ளியில் அவர் பெயரில் தபால் தலை வெளியிடப்பட்டது.


மை ஸ்டாம்ப் என்ற திட்டத்தின்கீழ் சேலம் தபால் துறை சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டு கவுரவிக்கப்பட்டது. இந்த வரவேற்பை கண்டு அசந்து போய்விட்டார் மாரியப்பன். 


Find Out More:

Related Articles: