தோஷங்களை நீக்கும் நிமிஷாம்பாள் ஆலயம்

Sekar Tamil
கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டின ஊருக்கு அருகில் கஞ்சம் என்னும் இடத்தில் நிமிஷாம்பாள் ஆலயம் உள்ளது. மேலும் சென்னை பிராட்வேயில் உள்ள காசிச்செட்டித் தெருவிலும் நிஷாம்பாள் ஆலயம் உள்ளது. 


இந்த கோவிலில் அம்பிகை வீற்றிருக்கிறாள். அம்பிகையின் பெயர் தான் நிமிஷாம்பாள். மேலும் இத்தளத்தில் அம்பாள் வழிபட்ட லிங்கம், ‘மவுத்திகேஸ்வரர்’ என்ற பெயரில், தனி சன்னதியில் அருள்புரிகிறார்.  லட்சுமி நாராயணர் மற்றும் விநாயகர், அனுமன், சூரியன் ஆகியோருக்கும் தனிச் சன்னிதி உள்ளது.


இக்கோவிலுக்கு வந்து நிமிஷாம்பாள் அம்மனை வழிபாட்டால், நோய் நொடிகள்,  முற்ஜென்ம சாபங்கள், தோஷங்கள் உள்ளிட்ட அனைத்து பாவ காரியங்களும் நீங்கி, வாழ்க்கை நலம் பெறும் என்று பரவலாக கூறப்படுகிறது. 


பக்தர்களுக்கு தக்க சமயத்தில் கை கொடுப்பவளாக இந்த அம்மன் திகழ்கிறார். இதனால் இத்தளத்தில் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.


Find Out More:

Related Articles: