கல்யாண ராணி... சொகுசு வாழ்க்கை ராணிக்கு இப்போ கட்டாந்தரை

Sekar Tamil
பெங்களூர்:
பல கல்யாணம்... சொகுசு வாழ்க்கை வாழ்ந்த "கல்யாண ராணி" இப்போ... சிறையின் கட்டாந்தரையில் காலத்தை கடத்துகிறார். இந்த தில்லாலங்கடி பெண் பற்றி அறிந்து கொள்வோமா!


பெங்களூரில் யாஸ்மின் என்ற பெண் அடுத்தடுத்து ஏழு பேரை கல்யாணம் செய்தார். இதில் பெரிய விஷயம் என்னவென்றால் அவர்களை ஏமாற்றி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததுதான். தற்போது கைதாகி சிறையில் உள்ள அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


 பெங்களூரு கேஜிஹல்லி பகுதியை சேர்ந்தவர் யாஸ்மின் (38). இவர்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பி பெங்களூரு சாராய் பாளையத்தை சேர்ந்த இம்ரான் என்பவரை காதலித்து திருமணம் செய்ய... சந்தோஷமான குடும்ப வாழ்க்கையில் இவர்களுக்கு 2 குழந்தைகள். 


தொடர்ந்து இம்ரானை வற்புறுத்தி அவரது பெயரில் உள்ள சொத்துக்களை தன் பெயருக்கு மாற்ற சொல்லியுள்ளார் யாஸ்மின். ஆனால் இதற்கு இம்ரான் சம்மதிக்கவில்லை. தொடர்ந்து இம்ரானிடம் இருந்த பல லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு யாஸ்மின் எஸ்கேப் ஆக அவரை பல இடங்களில் இம்ரான் தேடி வந்தார். 


 ஒருவழியாக அவரை கண்டுபிடிக்க... அப்போதுதான் யாஸ்மின்னின் மறுபக்கம் தெரிய வந்துள்ளது. செம தில்லாங்கடியான அவர் பல தொழிலதிபர்கள் உட்பட ஏழு பேரை திருமணம் செய்து அவர்களை ஏமாற்றி பணம் பறித்த விஷயம்தான். 


அப்புறம் என்ன போலீசுக்கு போனார் இம்ரான். எனது மனைவி யாஸ்மின் என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டு பிரிந்து சென்றார். பின்னர் அவர் அப்சல் சோயிப், சையத் ஷேக், ஈராஜ், ஆசிப் உள்பட 6 பேரை திருமணம் செய்துள்ளார். அவர்களிடம் சில ஆபாச புகைப்படங்களை காட்டி கோடிக்கணக்கில் பணத்தை கறந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்று போட்டு கொடுத்தார். 


தொடந்த யாஸ்மினால் பாதிக்கப்பட்ட மற்ற கணவர்களான அப்சல், சோயிப் ஆகியோரும் போலீசில் புகார் அளிக்க இப்போது கைதாகி சிறையில் கட்டாந்தரையில் உட்கார்ந்து கம்பி எண்ணுகிறார்.... தில்லாலங்கடி யாஸ்மின். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Find Out More:

Related Articles: