லஞ்சமாக பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்

SIBY HERALD
அரசு பணி அனுமதி  பெற அமைச்சர்  லஞ்சமாக இரண்டு பாலிவுட் நடிகைகளை கேட்டால்  என்ன தண்டனை என்று  ஆராய்ந்து வருவதாக , ஊழல் வழக்குக்காக இந்த தகவல் தேவைப்படுவதாக  பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி  தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நடிகைகளை லஞ்சமாக கேட்கும் அமைச்சருக்கு   சட்டத்தில் என்ன தண்டனை என்பது குறித்த ஆலோசனையை  வழங்க விருப்பம் உள்ளவர்கள்  உதவலாம் என்றும் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.



நெட்டிசன்கள் சுப்பிரமணியன் சுவாமியிடம் அந்த அமைச்சர் யார்,  அமைச்சரிடம்  கோரிக்கை  வைத்தது யார், அந்த  பாலிவுட் நடிகைகள் யார் என்பது குறித்த  கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.  வெளிப்படுத்துங்கள் என்று பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.  விபரங்களை சுப்பிரமணியன் சுவாமி வெளியிடுவாரா என்பதை  பார்ப்போம்.


Find Out More:

Related Articles: