ஜாதி கேட்ட கிருஷ்ணசாமி!

SIBY HERALD
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பின்போது நிருபரின் பெயர்,ஊர், ஜாதி என்ன என்று கேட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது. முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில்  தென்காசியில்  போட்டியிட்டு தோல்வி அடைந்த கிருஷ்ணசாமி  பேட்டி அளித்தார்.



அப்போது  வாக்களித்த அனைத்து சமுதாய மக்களுக்கு நன்றியை தெரிவித்த அவர்,  கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.  தனது பேட்டியின் இடையே மோடி செய்த நன்மைகளை  மறைத்து விட்டு, எதிர்மறையாகவே செய்தி வெளியிடுவதாக,  அதனால் தான் பாஜக கூட்டணி தமிழகத்தில் தோல்வி அடைந்ததாக கூறினார்.


இதனால்  வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் ஆவேசமாக  ஒரு நிருபரை  எந்த பத்திரிகை? ஊர்? ஜாதி என்ன? என்று   கேட்க தொடங்கியதால் பத்திரிகையாளர்கள்  எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது.  


Find Out More:

Related Articles: