ஹைதராபாத்தில் அரபு நாட்டவருக்கு இரையாகும் சின்னஞ்சிரு ஏழை சிறுமிகள் - ஒப்பந்த திருமண மோசடி கும்பல் கைது

J Ancie


ஏழை பெண்களை, குடும்பங்களை குறி வைத்து நடத்தப்படும் ஒப்பந்தத் திருமணம் என்ற மோசடி தற்போது ஆந்திராவில்லுள்ள ஹைதராபாத்தில் மிகவும் வேகமாக பரவி வருவதாக காவல்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். இவ்விவகாரத்தில் அரபு நாட்டவர்கள், மும்பை மதகுரு பாரித் அகமது கான் உள்பட மூன்று முக்கியமான மத குருகளை போலீஸ் கைது செய்து உள்ளது. நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம், லிவிங் டுகெதர் என இன்றைக்கு பல வகை திருமணங்கள் இருக்க தற்போது "ஒப்பந்த திருமணம்"




இந்திய மக்கள் மத்தியில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. ஆந்திராவின் ஹைதராபாத்துக்கு மாணவர் விசாவில் படிக்க வரும் சூடான், சோமாலியா உள்ளிட்ட பல வெளிநாட்டவர்கள், அங்குள்ள அப்பாவி பாமர ஏழை முஸ்லீம் பெண்களை பணம் கொடுத்து திருமணம் செய்து கொண்டு, சில வருட படிப்பு காலம் முடிந்து தங்கள் தாயகம் திரும்பும் போது அவர்களை விவாகரத்து செய்துவிட்டுச் லேசாக சென்றுகின்றனர்.




இதனால் பாதிப்பிற்கு ஆளாவது என்னவோ ஆந்திரா ஏழை சிறுமிகள்தான். கடந்த 2015ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் ஒவ்வொரு வாரமும் விகிதம் 5, 6 சிறுமிகள் அரபு நாட்டவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் அவலநிலை  தற்சமையம் காணப்படுகிறது என போலீஸ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது  முதியவர் ஒருவர் ஹைதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை ரூ. 5 லட்சம் ரொக்கமாக கொடுத்து திருமணம் செய்துக் கொண்ட வெளி உலகிற்கு தெரியவந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் தாயார் அவ்ள் கடிதத்தைப்பார்த்து போலீசில் புகார் கொடுத்த போதுதான் சிறுமியின் உறவினர்கள், முகவர்கள் மூலம் பணம் வாங்கிக்கொண்டு சிறுமியை முதியவருக்கு திருமணம் செய்து வைத்தது அனவருக்கும் தெரியவந்தது. ஹைதராபாத் முதல் அரபு நாடுகள் வரையில் நீடித்திருக்கும் இந்த நெட்வோர்க் கும்பலானது இப்போழுது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரத்தில் போலீஸ் 35 ஏஜெண்டுகளை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலான எஜண்ட்டுகள் பெண்கள் எனவும் தெரியவந்து உள்ளது.



Find Out More:

Related Articles: