அமித் ஷாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த முதல் நேற்றி அடி.. குஜராத்தில்!

J Ancie


குஜராத் ராஜ்யசபா தேர்தலில் மிகப்பெரிய போராட்டத்திற்குப் பின் நல்ல வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் அகமது படேல், தனது அமோக வெற்றி சத்தியத்திற்கு கிடைத்த நல்ல வெற்றி என்று ட்விட்டியுள்ளார். இதன் மூலம் குஜராத் மாநிலத்தில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷாவின் பலே பலே ராஜதந்திரத்திற்கு முதல் நெற்றி அடி கிடைத்துள்ளது. குஜராத்தில்    எதிர்ப்பார்க்கப்பட்ட ராஜ்யசபா தேர்தல் நேற்று நடைபெற்றது.

காங்கிரஸ் வேட்பாளரான அகமது படேலை திட்டமிட்டு தோற்கடிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சுற்றி வளைத்தது பாஜக. இதனால் பெங்களூர் ரிசார்ட்டில் சொகுசாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேரை அக்கட்சி தங்க வைத்து சொகுசாக அடைகாத்தது.

இதனால் அகமது படேலின் வெற்றி மிகவும் கேள்விக்குறியானது. பாஜகவின் நரிதந்திரத்தை முறியடித்து வெற்றி பெற்றுள்ளார் அகமது படேல்.பாஜகவின் பலத்திற்கு எதிராக கிடைத்த வெற்றி இது. குஜராத்தில் பாஜக அரசின் பலத்தை எதிர்த்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம் என்று பதிவிட்டுள்ளார் அகமது படேல்.




Find Out More:

Related Articles: