பா.ஜ.க மனகணக்கு வெல்லுமா???

SIBY HERALD


உத்தரப்பிரதேச தேர்தல் முடிந்த கையோடு தமிழக அரசியலை தன் ஆட்சியால்ஆட்டிப் படைக்கவும் லோக்சபா தேர்தலுக்கு வியூக்கவும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது பாஜக. அந்த கட்சியைப் பொறுத்தவரையில் 2019 தேர்தலில் 37% வாக்குகளுக்கு இலக்கு வைத்துள்ளது என்கின்றன டெல்லி தலைமை வட்டாரங்கள். பாஜகவின் புதிய கொள்கை முழக்கம் 'கழகங்கள் இல்லாத தமிழகம்'.




அதுவும் ஜெயலலிதா மறைந்தபின் அதிமுகவை சுக்கு நூறாக சிதைத்துக் கொண்டிருக்கிறது பாஜக. தற்போதைய நிலையில் சசிகலா, ஓபிஎஸ், தீபா என 3 கோஷ்டிகள் அதிமுகவில் உள்ளன. சசிகலாவை தொடக்கம் முதலே எதிர்த்தாலும் ஓபிஎஸ் அணியில் இணைவதற்கு விரும்பிய சசிகலா புஷ்பாவை பாஜக தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறது. ஆனால் கணக்கு போட்டு கூட்டல் கழித்தல் போட்டு மொத்தம் 37% வாக்குகளை பாஜகவால் அள்ளிவிட முடியும் என கணக்கிட்டனர்.அட்வைசர் ஆடிட்டர். இதற்கேற்பவே மத்தியில் ஆட்சியில் இருக்கும் கோதாவில் ஒட்டுமொத்த தமிழக அரசியலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு விளையாட்டுக் காட்டுகிறதாம் பாஜக


Find Out More:

Related Articles: