ஸ்கீம் சூப்பர்... சிறையில் கைதிகளாக தங்கிய 3 ஐ.டி. ஊழியர்கள்...

Sekar Tamil
ஐதராபாத்:
இந்த ஸ்கீம் எங்களுக்கு பிடிச்சு இருக்கு... பிடிச்சு இருக்கு என்று ஐ.டி. ஊழியர்கள் சொல்லாம சொல்லியிருக்காங்க...


தெலுங்கானா மாநில சிறையில் கட்டணம் செலுத்தி சிறை அனுபவம் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது அல்லவா... இதில் ஐ.டி., ஊழியர்கள் 3 பேர் வந்து தங்கியுள்ளனர். 


மேடக் மாவட்டத்தில் 200 ஆண்டுகள் பழமையான சங்கா ரெட்டி மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த வளாகத்தில் புதிய சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளதால் பழைய சிறை, அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.


இந்நிலையில் புதுசு... கண்ணா... புதுசு என்பது போல சிறை அனுபவம் பெற விரும்புவோர் ரூ.500 செலுத்தினால் சிறையில் ஒரு நாள் தங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் நிதிஷ் ரெட்டி மற்றும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் 2 பேர் பணம் கட்டினர். ஒரு நாள் சிறைவாசத்துக்கு பின், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


சிறை அருங்காட்சியக பொறுப்பாளர் லட்சுமி நரசிம்மா கூறியதாவது: கடந்த 20 நாட்களில் 8 பேர் சிறைக்கு வந்து சென்றுள்ளனர். லாரி டிரைவர் ஒருவரும் சிறைக்கு வந்தார். நள்ளிரவில், அவர் பயந்து அலறியதால் பாதியிலேயே அவரை விடுவித்தோம் என்று தெரிவித்துள்ளார்.



Find Out More:

Related Articles: