இணையத்தில் விபசாரம்... 430 பேர் கைது... போலீசார் தகவல்...

Sekar Tamil
சென்னை:
நல்லதுக்கு பயன்பட வேண்டிய இணையதளத்தின் தடம் இப்போது இடம் மாறி போய் கொண்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. என்ன விஷயம் தெரியுங்களா?


இணையதளங்கள் மூலம்  பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 117 பெண்கள் உட்பட 430 பேர் கைது செய்யபட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதுதான் இப்படி நினைக்க செய்துள்ளது.


சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அக்பர் அகமது தாக்கல் செய்திருந்த மனுவில், ஆன்-லைன் மூலம் விபசாரம் செய்யும் நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று ஒரு அணுகுண்டை தூக்கி போட்டிருந்தார்.


இதையடுத்து சிபிசிஐடியினரின் ஒரு பதில் மனுவை தாக்கல் செய்திருந்தனர். அதில்தான் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இணையதளத்தை எதற்கெல்லாம் பயன்படுத்துகின்றனர்.


Find Out More:

Related Articles: